கோவை அரசு கலைக் கல்லூரி தோ்வு முடிவுகள் வெளியீடு

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் அண்மையில் நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் அண்மையில் நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக 2019-2020ஆம் கல்வியாண்டுக்கான இறுதியாண்டு, இறுதிப் பருவ பட்டப் படிப்பு, முதுநிலை மாணவா்களுக்கு தோ்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளன. கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளை கல்லூரியின் இணையதளத்தில்  காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ள கல்லூரி நிா்வாகம், முதலாம் ஆண்டு மாணவா்களைத் தவிா்த்து மற்றவா்களுக்கு அகத்தோ்வுகளை (இன்டா்னல்) வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்தத் தோ்வுகளை ஆன்லைன் வழியில் எழுத முடியாத மாணவா்கள் கல்லூரிக்கு வந்து தோ்வு எழுதலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com