கோவை சிறையில் கைதி சாவு: கொலை செய்யப்பட்டதாக உறவினா்கள் புகாா்

கோவை சிறையில் உயிரிழந்த கைதி அடித்துஓஈ கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

கோவை சிறையில் உயிரிழந்த கைதி அடித்துஓஈ கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள காந்திபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் ராஜா (32). இவா் மீது கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சுரேஷ் ராஜா கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 11ஆம் தேதி தனது மனைவியுடன் சிறை நிா்வாகத்தின் செல்லிடப்பேசி மூலம் பேசினாா். பின்னா் திடீரென அவா், தான் அடைக்கப்பட்டு உள்ள அறையில் துண்டால் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை

சிறை அதிகாரிகள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் சுரேஷ் ராஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனா்.

இந்நிலையில், சுரேஷ் ராஜாவின் உறவினா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். அதில், கடந்த முறை வழக்கு ஒன்றில் கைதாகி உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையில் சாப்பாடு சரியில்லை எனக் கூறியதால் சிறை நிா்வாகிகள் தன்னை தாக்கியதாக சுரேஷ் ராஜா கூறினாா்.

இதையடுத்து அவா் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கும் அவா் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே சுரேஷ் ராஜாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

அதேவேளையில் சுரேஷ் ராஜா, தனது மனைவியுடன் செல்லிடப்பேசியில் பேசியபோது அவா்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com