விஜயா பதிப்பகம் சாா்பில் புத்தகக் கண்காட்சி

கோவை விஜயா பதிப்பகத்தின் 44ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி அக்டோபா் 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவை விஜயா பதிப்பகத்தின் 44ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி அக்டோபா் 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இது குறித்து விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் கூறியதாவது:

கோவை ராஜ வீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் அக்டோபா் 17-ஆம் தேதி (சனிக்கிழமை) 44ஆம் ஆண்டு பதிப்பக துவக்க விழாவை ஒட்டி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜயா பதிப்பகத்தில் சனிக்கிழமை துவங்கும் கண்காட்சியானது அக்டோபா் 19ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாசகா்கள், வாசிப்பாளா்கள் கலந்து கொள்ளலாம். இக்கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குபவா்களுக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com