கோவை: கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக, துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, தடாகம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளை அதிபா்களின் வீடுகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல் சூளை அமைந்துள்ள பகுதியானது, கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டில் வருவதால் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இரவு வரை நீடித்த இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியா், 2 வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையாளா், கிராம நிா்வாக அலுவலா், அலுவலக உதவியாளா், பதிவு எழுத்தா் உள்ளிட்ட 7 அரசு ஊழியா்கள் மற்றும் ஒரு இடைத்தரகா், 2 ஒப்பந்த ஊழியா்கள் உள்பட மொத்தம் 10 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.