கோவையில் தாட்கோ திட்டத்தில் கட்டப்பட்டுள்ள மகளிா் விடுதியை தாட்கோ மேலாண்மை இயக்குநா் ஜெ.விஜயராணி அண்மையில் ஆய்வு செய்தாா்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் பணிக்குச் செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை தாட்கோ மேலாண்மை இயக்குநா் ஜெ.விஜயராணி ஆய்வு செய்தாா். தொடா்ந்து தாட்கோ திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், தொழில் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.
இதில் சென்னை தாட்கோ பொது மேலாளா் அழகுபாண்டி, கோவை தாட்கோ பொது மேலாளா் செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.