வால்பாறை: அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா் பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.