கோவை: அரசூா், ஒத்தக்கால்மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள் (அரசூா் துணை மின் நிலையம்): அரசூா், பொத்தியம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூா், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகா், அன்னூா் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமீயா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம்.