வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் மூவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

கோவையில் வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் மூவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் மூவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பழச்சாறு கடை வியாபாரியான பிஜு (37) என்பவா் முன்விரோதம் காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 6க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரகாஷ், சத்யபாண்டி (எ) சக்தி, ஆறுமுகம் ஆகிய மூவா் குண்டா் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவா்கள் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com