கோவை: தென்னிந்திய பட்டயக் கணக்காளா் (ஆடிட்டா்கள்) சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக கோவையில் உள்ள தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கம் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கத்தின் 80ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 2020-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் சங்கத்தின் தலைவராக என்.ரவிசங்கரும், துணைத் தலைவராக என்.ஈஸ்வரகிருஷ்ணனும் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், சங்கத்தின் செயலராக எஸ்.வெங்கடேஷ், பொருளாளராக எல்.காமேஷ், துணைச் செயலராக வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.