பயணிகள் குறைவு: கோவை கோட்டத்தில் 202 பேருந்துகள் குறைப்பு

கோவை கோட்டத்தில் பயணிகள் குறைவால் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளில் 202 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

கோவை கோட்டத்தில் பயணிகள் குறைவால் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளில் 202 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் 800 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் பேருந்துகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கோவை கோட்டத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் கரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்த அளவே இருந்ததால் புதன்கிழமைமுதல் 800 பேருந்துகளில் 202 பேருந்துகள் குறைக்கப்பட்டு, 598 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் பயணிப்பதை விரும்பவில்லை. இதனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோவை கோட்டத்துக்கு உள்பட்ட 4 மாவட்டங்களில் இயக்கப்பட்ட 800 பேருந்துகளில் 202 பேருந்துகள் புதன்கிழமை நிறுத்தப்பட்டன. தற்போது, கோவை மாவட்டத்தில் 257, திருப்பூா் 111, நீலகிரி 104, ஈரோடு 126 என 598 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com