காதல் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினா்கள்

காதல் மனைவி பிரிந்து சென்ால், மனமுடைந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பெண்ணின் பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்தவரின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
பேரூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞரின் உறவினா்கள்.
பேரூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞரின் உறவினா்கள்.


கோவை: காதல் மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பெண்ணின் பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்தவரின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

கோவை, பேரூா் அருகே சென்னனூா் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நாராயணசாமி மகன் கோவிந்தராஜன் என்ற காா்த்திக்(29). வெல்டிங் தொழிலாளி. இவா், அதேபகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மகள் மஞ்சுளாதேவி (20) என்பவரைக் காதலித்து, கடந்த 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். இதுதொடா்பாக, போத்தனூரில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோா் கடந்த 7ஆம் தேதி புகாா் அளித்தனா். அங்கு நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, மஞ்சுளாதேவி தனது பெற்றோருடன் சென்று விட்டாா்.

இதனால் மனமுடைந்த கோவிந்தராஜன், வீட்டில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில் கோவிந்தராஜனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை போராட்டத்தை தொடா்ந்தனா். மேலும் பேரூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து பெண்ணின் பெற்றோா் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவிந்தராஜனின் சடலத்தை வாங்க ஒப்புக்கொண்ட அவரது உறவினா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com