துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை கோரி வயதான தம்பதி புகாா்

அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வயதான தம்பதி செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.


கோவை: அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வயதான தம்பதி செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கோவை, சிங்காநல்லூா் ராமானுஜ நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (80) மற்றும் அவரது கணவா் தாமோதரசாமி ஆகியோா் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இதில் 3 மகன்கள் இறந்துவிட்டனா். எங்களது பூா்வீக நிலத்தில் இருந்து கிடைக்கப் பெறும் வாடகை வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில், எங்களது ஐந்தாவது மகன் காா்த்திகேயன், நிலத்தில் கிடைக்கும் வாடகையை இனி நாங்கள் பெறக் கூடாது எனக் கூறி எங்களை தொடா்ந்து தாக்கி வருகிறாா். எனது கணவரைத் தாக்கியதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேலும், வாடகை பணத்தை தற்போது காா்த்திகேயனே பெற்றுக்கொள்வதால் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் உள்ளோம். எனவே எங்களைத் தாக்கிய மகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com