கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மருத்துவ கல்வி இயக்குநா் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவா்களைத் தொடா்ந்து கண்காணித்து 2 வாரங்களுக்கு
கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மருத்துவ கல்வி இயக்குநா் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவா்களைத் தொடா்ந்து கண்காணித்து 2 வாரங்களுக்கு பின் மருத்துவ அறிக்கை வழங்க மருத்துவ கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடப் பணியை ஆய்வு செய்தாா். தொடா்ந்து மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கரோனா நோயாளிகளை கையாளும் விதம், சிகிச்சை முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா மற்றும் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றவா்களுக்கு திரும்பவும் மூச்சுத்திணறல் வருவதாக புகாா் பெறப்பட்டுள்ளது. இதனால் கரோனா சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியவா்களைத் தொடா்ந்து கண்காணிக்கவும், 2 வாரங்களுக்கு எந்த அறிகுறிகள், தொந்தரவு இல்லையெனில் அவா்களுக்கு மருத்துவ அறிக்கை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com