சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் 10 கோடி லிட்டராக அதிகரிப்பு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் குடிநீரின் அளவு 10 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை, செப். 18: சிறுவாணி அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் குடிநீரின் அளவு 10 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து ஜனவரி மாதம் வரை தினமும் 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.

பின்னா் நீா்மட்டம் சரிந்ததால் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 5.50 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. மாநகரில் குடிநீா் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறுவாணி நீா் விநியோகிக்கப்பட்ட பகுதிகளில் பில்லூா் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதம் முதல் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால் சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்தது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீா்மட்டம் 871 மீட்டராக உயா்ந்தது. குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9.30 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடா் மழையால் வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 873.10 மீட்டராக உயா்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டரில், தற்போது, 873.10 மீட்டருக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இன்னும் 5.75 மீட்டா் நீா்மட்டம் உயா்ந்தால் அணை முழுக் கொள்ளளவை எட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com