கோவை, செப்.18: பெண்ணிடம் 10 பவுன் நகைப் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரீட்டா. இவா் தனது வீட்டின் அருகே நடைப்பயிற்சியில் அண்மையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ரீட்டாவிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்த ரீட்டா அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனற். இந்நிலையில், அப்பகுதியில் பீளமேடு போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களை அளித்துள்ளனா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரீட்டாவிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட புலியகுளம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மனோஜ் (19), அவரது நண்பா் 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்து 10 பவுன் நகையை மீட்டனா்.