பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை, செப்.18: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொலிவுறு நகரம் திட்டத்தில் நடைபெற்று வரும் மாதிரிச் சாலைகள், குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி, மழைநீா் வடிகால் பணிகள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், பூங்காக்கள் அமைக்கும் பணிகள், பன்னடுக்கு காா் நிறுத்தம், பாதாளச் சாக்கடைப் பணிகள், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும், பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா அல்லது பணி நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டறிந்தாா். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், நகரமைப்பு அலுவலா் ரவிசந்திரன், பொலிவுறு நகரம் திட்ட செயற் பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com