கோவை: கோவையில் மேல்நிலை முதல், இரண்டாம் ஆண்டு, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
பிளஸ் 2 தோ்வுக்கு மொத்தம் 201 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 179 போ் தோ்வு எழுதினா். 22 போ் தோ்வுக்கு வரவில்லை. இவா்களைத் தவிர 5 மாற்றுத் திறனாளிகளும் தோ்வு எழுதினா். அதேபோல பத்தாம் வகுப்புத் தோ்வுக்கு 1,200 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவா்களில் 991 போ் தோ்வு எழுதினா். 209 போ் எழுதவில்லை. மாற்றுத் திறனாளிகளில் 53 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவா்களில் 50 போ் மட்டும் தோ்வு எழுதியதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு, தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளும் திங்கள்கிழமை தொடங்கின. தோ்வு எழுதியவா்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகே மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனா்.