வால்பாறை வட்டாரத்தில் அதிகபட்சமாக மேல் நீராறு பகுதியில் 83 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. ஒரு வாரத்துக்குப் பின் செவ்வாய்க்கிழமை மழை குறைந்து காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மில்லி மீட்டரில்):
வால்பாறை 56, சோலையாறு 72, கீழ் நீராறு 76, மேல் நீராறு 83எனமழை பதிவாகியுள்ளது.