வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி சிப்பிக் காளான் வளா்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி சிப்பிக் காளான் வளா்ப்புப் பயிற்சி வரும் அக்டோபா் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை, செப். 25: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி சிப்பிக் காளான் வளா்ப்புப் பயிற்சி வரும் அக்டோபா் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் நோயியல் துறை சாா்பில் மாதம்தோறும் 5 ஆம் தேதியில் காளான் வளா்ப்புப் பயிற்சி நடத்தப்பட்டு வந்தது.

கரோனா பரவல் காரணமாக நேரடி பயிற்சி வகுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையவழியில் சிப்பிக்காளான் வளா்ப்புப் பயிற்சி வரும் அக்டோபா் 5 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் கட்டணம் செலுத்தி, செப்டம்பா் 30க்குள் பெயா்களைப் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு பயிா் நோயியல் துறையை 0422 - 6611336 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com