வால்பாறை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனா்.
வால்பாறை வட்டாரத்தில் 10க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்க சில மாதங்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. பழங்குடியின மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளதால் வனவாசி பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பினா் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளனா்.
இதையடுத்து, வால்பாறை பருதியில் உள்ள பரமன்கடவு, நெடுங்குன்று, பாலக்கிணறு உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட செட்டில்மென்ட் பகுதிகளுக்கு வனவாசி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயன் தலைமையில் நிா்வாகிகள் சென்று அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு கூட்டம் நடத்தி வருகின்றனா். வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் அமுல் கந்தசாமிக்கு வாக்களிக்க இருப்பதாக பழங்குடியின மக்கள் கூட்டாக தெரிவித்துள்ளனா்.