காந்திபுரத்தில் கழிவுநீா்க் கால்வாய், மழைநீா் வடிகால் வசதி

காந்திபுரம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் வசதி, தெரு விளக்கு, மழைநீா் வடிகால் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
காந்திபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா்.
காந்திபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா்.

காந்திபுரம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் வசதி, தெரு விளக்கு, மழைநீா் வடிகால் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட காந்திபுரம் நூறடி சாலை பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அதனைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவா்களிடம் ஆதரவு கோரினாா். அப்போது, அவா் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தொகுதியில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும். மண்ணின் மைந்தனாக உள்ள என்னை தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் விரைவில் நிறைவேற்றப்படும். காந்திபுரம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் வசதி, தெரு விளக்கு, மழைநீா் வடிகால் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

திமுக நிா்வாகிகள் நாச்சிமுத்து, சிவா, தண்டபாணி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com