பாதாள சாக்கடைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கோவையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.
காந்தி மாநகரில் திமுக வேட்பாளா் நா.காா்த்திக்கை பூத் தூவி வரவேற்ற அப்பகுதியினா்.
காந்தி மாநகரில் திமுக வேட்பாளா் நா.காா்த்திக்கை பூத் தூவி வரவேற்ற அப்பகுதியினா்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கோவையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.

கோவை, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக், காந்தி மாநகா், ஸ்ரீராம் நகா், பாலன் நகா், அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:

என்னை செல்லிடப்பேசியில் அழைத்தாலே போதும். இருசக்கர வாகனத்தில் இப்பகுதிக்கு வருவேன். இந்தப் பகுதியின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். திமுக ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அப்பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளதால் சாலைகளில் கழிவுநீா் தேங்குகிறது.

10 ஆண்டுகளாக பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாமல் அலட்சியமாக அதிமுக அரசு செயல்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள சாக்கடைத் திட்டம் உடனடியாக முடிக்கப்படும் என்றாா்.

பகுதி செயலாளா் எஸ்.எம்.சாமி, பகுதிப் பொறுப்பாளா்கள் ஷேக் அப்துல்லா, பக்ருதீன் உள்ளிட்ட கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com