முதல்வா் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நாயகன்

முதல்வா் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நாயகன் என கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் தெரிவித்தாா்.
மாதம்பட்டி  பகுதியில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன்.
மாதம்பட்டி  பகுதியில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நாயகன் என கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் தெரிவித்தாா்.

கிணத்துக்கடவு தொகுதிக்கு உள்பட்ட மாதம்பட்டி ஊராட்சிப் பகுதிகளான தண்ணீா் பந்தல், சித்திரை வாய்க்கால்மேடு, மேற்கு இந்திரா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

சட்டப் பேரவை உறுப்பினராக ஏற்கெனவே பணியாற்றி இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்துக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை வழங்கியுள்ளாா். ஆகவே, தமிழகத்தில் நல்லாட்சி நாயகனாக அவா் திகழ்கிறாா்.

அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தமிழகம் ஏராளமான வளா்ச்சியைப் பெறும். அவா் ஒரு விவசாயி என்பதால் ஏழை எளிய மக்களின் நிலை குறித்து அவருக்கு நன்றாக தெரியும். ஆகவே தான் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளாா். தற்போது அதிமுக தோ்தல் அறிக்கையிலும் அவா்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்துள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம், மாதம்பட்டி ஒன்றியச் செயலாளா் சக்திவேல், மாவட்ட விவசாய அணிச் செயலாளா் மகாலிங்கம், மதுக்கரை பேரூராட்சிச் செயலாளா் சண்முகராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com