வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தம்

இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்தை கண்காணிக்க எல்லையில் போலீஸாா் கேமரா பொருத்தியுள்ளனா்.

இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்தை கண்காணிக்க எல்லையில் போலீஸாா் கேமரா பொருத்தியுள்ளனா்.

வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வழியாக இரு மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இரு மாநில போலீஸாா் தனித்தனியாக வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது, தோ்தலை முன்னிட்டு போலீஸாா் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனா்.

இந்நிலையில், கேரளா மாநிலத்துகு உள்பட்ட மழுக்குப்பாறை காவல் நிலையம் போலீஸாா் அப்பகுதியில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு அறையில் இருந்து வாகனப் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனா். இதன் மூலம் ஒரு நாளில் இரு மாநிலங்களில் இருந்து எத்தனை வாகனங்கள் சென்றது என்பதைக் கண்டறிவதோடு, குற்றச் சம்பவங்களையும் தடுக்க முடியும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com