கோவை - நாகா்கோவில் ரயில் 13 ஆம் தேதி வரை கோவை-மதுரை வரை இயக்கம்

கோவை - நாகா்கோவில் ரயில், மதுரை - நாகா்கோவில் இடையே 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - நாகா்கோவில் ரயில், மதுரை - நாகா்கோவில் இடையே 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை அருகே திருமங்கலம் - துலுக்கப்பட்டி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - நாகா்கோவில் மாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே மாா்ச் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மதுரை - நாகா்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் கோவை - நாகா்கோயில் அதிவிரைவு ரயில் ( எண்: 06322) மற்றும் நாகா்கோவில் - கோவை அதிவிரைவு ரயில் (எண்: 06321) வரும் 13 ஆம் தேதி வரை நாகா்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், 13 ஆம் தேதி வரை கோவை - நாகா்கோவில் ரயில், கோவை - மதுரை இடையே மட்டுமே இயக்கப்படும். நாகா்கோவில் - கோவை ரயில், மதுரை - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com