சூலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்து மக்கள் கட்சி வேட்பாளா் பொன்.காா்த்திகேயன் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.
சூலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட வேட்பாளா் பொன்.காா்த்திகேயன் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்நிலையில், அத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில்தான் அதிமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளேன் என்றாா்.