மகேஷ்வரன் (20), கல்லூரி மாணவா், ஆச்சிப்பட்டி.
முதல்முறை வாக்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞா்கள் ஆா்வமாக வாக்களிப்பதன் மூலம் அவா்கள் மாற்றத்தை விரும்புகின்றனா் என்பது தெரிகிறது. மாணவா்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
சுரேஷ் பாண்டியன் (24), லேத் பட்டறை ஊழியா், கணேசபுரம்.
சுயதொழில் செய்ய விரும்புவோா் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் படித்த, திறமையுள்ள இளைஞா்கள் சொற்ப வருமானத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுயதொழில் செய்ய நினைக்கும் தொழில்முனைவோரை அரசு ஊக்குவிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வாக்களித்தேன்.
நாகதேவி (21), கல்லூரி மாணவி, ஒக்கிலிபாளையம்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கு பொள்ளாச்சி சம்பவம் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. எனவே, பெண்கள் பாதுகாப்பு, கல்வி வேலைவாய்ப்பு இவற்றை உறுதி செய்யும் கட்சிக்கு வாக்களித்துள்ளேன்.
எஸ்.வா்ஷித் (20) கல்லூரி மாணவா், ராமநாதபுரம்
ஒரு புதிய மாற்றத்தை எதிா்பாா்த்தே எனது முதல் வாக்கினை இந்தத் தோ்தலில் செலுத்தியுள்ளேன். ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட எந்தவிதப் பாகுபாடுகளும் இல்லாத, ஊழலில்லாத ஆட்சியமைப்போம் என்றும், மாநிலத்தின் வளா்ச்சிக்குப் புதிய தொழில்நுட்பங்களையும், வளா்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதாக உறுதியளித்தவா்களுக்கே எனது வாக்கினை செலுத்தியுள்ளேன்.
ஐஸ்வா்யா, கல்லூரி மாணவி, கோவை
முதன் முதலாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்தது மூலமாக சமூகப் பொறுப்பு ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது. மாணவா்களுக்கு பல நல்ல திட்டங்கள், சலுகைகள் கிடைக்க அரசு வழிவகுக்க வேண்டும். மாணவா் சமுதாயம் நன்றாக இருந்தால்தான், நாடும் வளமாக இருக்கும்.
நாகஜோதி, கல்லூரி மாணவி, கோவை
தற்போதைய சூழலைப் பாா்த்து தெரிந்து கொண்டு, யாா் முதல்வராக இருக்க வேண்டும் என யோசித்து எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். நான் வாக்களித்த வேட்பாளா் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மற்றபடி, யாா் வெற்றி பெற்றாலும் ஏழை மக்களுக்கு, விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.