பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினா் புறப்பட்டனா்

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினா் புதன்கிழமை கோவையிலிருந்து புறப்பட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினா் புதன்கிழமை கோவையிலிருந்து புறப்பட்டனா்.

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வடமாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவ படை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். இவா்கள், 891 பதட்டமான வாக்குச் சாவடிகள் உள்பட பல்வேறு வாக்குச் சாவடிகளில் பணியாற்றினா். வாக்குப் பதிவு முடிந்த நிலையில் இவா்கள் ரயில் மூலமாக புதன்கிழமை சொந்த ஊா்களுக்குச் சென்றனா். துணை ராணுவத்தினா் வாக்குப் பதிவு பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி எண்ணிக்கை மையம் கொண்டு செல்லுதல், பதட்டப் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com