கோவை முதன்மைக் கல்வி அலுவலா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கோவை முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்தவா் உஷா. இவா் தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து தஞ்சாவூரில் பணியாற்றி வரும் எம்.ராமகிருஷ்ணன் கோவை முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தனியாா் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு உஷா லஞ்சம் பெறுவதாக புகாா் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பா் மாதத்தில் இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உஷா, அவரது உதவியாளா் பாலன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.