கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை

கோவையில் கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

கோவையில் கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் விருப்பத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சித்தா சிகிச்சை எடுத்துக் கொண்டனா்.

கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் கொடிசியா மையத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சித்தா சிகிச்சைப் பிரிவு கடந்த ஜனவரி மாதத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது, கோவையில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 600ஐ கடந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், கரோனா பாதிப்புக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் சித்தா சிகிச்சை மையம் செயல்பாட்டிற்கு வரும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் சி.தனம் கூறியதாவது:

கரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சையில் கபசுர குடிநீா், சூரணம், அமுக்கரா, பிரம்மானந்த பைரவம் மாத்திரைகள், ஆடாதொடை, மனப்பாகு உள்ளிட்ட மருந்துகள் அளிக்கப்பட்டன. சித்தா சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைந்து குணமடைந்தனா். ஆா்வத்துடன் பலரும் சித்தா சிகிச்சை மேற்கொண்டனா்.

தற்போது கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 80 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com