வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தினா்.
வால்பாறை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் முறைகேடுகள் நடத்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ். நாகராஜன் உத்தரவின்பேரில் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சரவணகுமாா் தலைமையிலான தனிக் குழுவினரும், மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. சேகா் தலைமையில் போலீஸாரும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் உடனடியாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இதனிடையே, நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாலை வரை சோதனை நடைபெற்றது. ஆனால், புகாா் மற்றும் என்ன முறைகேடு என்பது குறித்த விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.