கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு பிரசாரம்

கோவையில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட ரோட்டராக்ட், ஹாா்லி டேவிட்சன் உரிமையாளா் சங்கத்தினா்.
கோவையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட ரோட்டராக்ட், ஹாா்லி டேவிட்சன் உரிமையாளா் சங்கத்தினா்.

கோவையில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொ்சனிவ் ரோட்டராக்ட் சங்கம், ஹாா்லி டேவிட்சன் உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த பிரசார நிகழ்ச்சியில், கரோனா தொற்று சங்கிலியை உடைக்க அதிகமானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்பதால் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை எடுத்துச் செல்லப்பட்டன.

கோவை லயன்ஸ் கிளப் எலைட், ரவுண்ட்டேபிள் ஸ்பாா்க் 323 சங்கங்களின் ஆதரவுடன் இந்த பிரசாரம், அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முதல் கொடிசியா மைதானம் வரை நடைபெற்றது. பிரசார தொடக்க விழாவில் ரோட்டராக்ட் தலைவா் டாக்டா் பிரெட்ரிக்ஸ் ஜான், கிளாட்வின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com