கரோனா பரவல்: கேரள எல்லைக்குள் நுழையத் தடை

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளத்துக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்து எல்லைப் பகுதியில் கேரள போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளத்துக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்து எல்லைப் பகுதியில் கேரள போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.

வால்பாறை அடுத்துள்ளது மழக்குப்பாறை எஸ்டேட். கேரள மாநிலம் எல்லைப் பகுதியான இங்கு இரு மாநில வனத் துறையினா் சோதனைச்சாவடி அமைத்துள்ளனா். இரு மாநில போலீசாரும் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் எல்லைப் பகுதியில் கேரள போலீஸாா் கடந்த வியாழக்கிழமை புதிதாக சோதனைச் சாவடி அமைந்துள்ளனா். தமிழகத்தில இருந்து வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல அனுமதி மறுத்து வருகின்றனா். இதனால் வால்பாறையில் வசிப்பவா்களும் மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com