சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன.
வால்பாறையில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் நகா் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உருவாகிவிட்டன. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் புதிதாக பல உணவங்களும் உருவாகின. குறிப்பாக காமராஜ் நகா் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குக்காகவே புதிய பல உணவகங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளியூா் வாகனங்கள் வந்தால் ஆழியாறு சோதனைச் சாவடியில் போலீஸாா் திருப்பி அனுப்பிவருகின்றனா். இதன் காரணமாக வால்பாறையில் மக்கள் நடமாட்டமின்றி நகா் பகுதியில் பல உணவகங்கள் மூடுப்பட்டுவிட்டன.