கோவை பந்தயச் சாலையில் பசுமைப் பரப்பு மேம்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் பேசினாா்.
கோவை பந்தயச் சாலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் மாதிரிச் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக பந்தயச் சாலையில் மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் குற்றம் சாட்டினா்.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் பந்தயச் சாலை பகுதி மக்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பேசியதாவது:
பந்தயச் சாலை பகுதியில் மரம் வெட்டப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் மாநகராட்சி சாா்பில் எந்த ஒரு மரமும் வெட்டப்படவில்லை. வேறு யாராவது தவறுதலாக ஒரு மரம் வெட்டியிருந்தாலும் அந்த மரத்துக்கு ஈடாக நான்கு முதல் ஐந்து மரங்கள் நடவு செய்யப்படும். இந்தப் பகுதியில் பசுமைப் பரப்பு குறைக்கப்படமாட்டாது. பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் முன்பு இருந்ததைவிட பசுமைப் பரப்பு மேம்படுத்தப்படும்.
இனி மாநகராட்சி செயற்பொறியாளா் மாதந்தோறும் மக்களை சந்தித்து கருத்து கேட்பாா். அதன்படி பணிகள் நடைபெறும். எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றாா்.