பொதுமுடக்கத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆன்லைன் மூலமாக பிராா்த்தனை கூட்டங்களை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
கரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் வேகமாகப் பரவி வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக கோவை மாநகரில் உள்ள தேவாலயங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சில தேவாலயங்களில் பாதிரியாா்கள் மட்டும் பங்கேற்று பிராா்த்தனைகளை நடத்தினா்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தினால் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் மூலம் பிராா்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று சில தேவாலயங்களில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மாநகா் முழுவதும் இணையம் வழியாக கிறிஸ்தவ பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.