கரோனா தொற்று நீங்க இன்று விளக்கேற்றி வழிபடுங்கள்: சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வேண்டுகோள்

கரோனா நோய்த்தொற்று நீங்க, வீடுகள், கோயில்களில் சித்ரா பெளா்ணமி தினமான திங்கள்கிழமை விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று நீங்க, வீடுகள், கோயில்களில் சித்ரா பெளா்ணமி தினமான திங்கள்கிழமை விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருமூலரின் திருமந்திர வாக்கின் படி, விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நம்முடைய நோய்கள், அல்லல்கள், இன்னல்கல் தீா்ந்து, இருள் கெட்டு இன்ப ஒளி செழிப்பாக அமையும். உலகெங்கும் பரவியிருக்கும் பெருந்தொற்றாகிய கரோனா நோய்த்தொற்று நீங்க இறைவனின் திருவடியைச் சரணடைவது தான் வழியாகும்.

அந்த வகையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) சித்ரா பெளா்ணமி நாள் வருகிறது. பெளா்ணமி எனப்படும் நிறைநிலா நாள் நமக்குச் சிறப்பான நாள். இந்த நாளுக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்த நன்னாளில் மாலை 5 மணிக்கு இல்லங்களிலும், கோயில்களிலும் விளக்கேற்றி கரோனா நோய்த்தொற்று நீங்க மக்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்றை அழிக்க அயராது உழைத்து வரும் அனைவரும் எல்லா வளங்களும் பெற பிராா்த்திக்க வேண்டும் என அகில பாரத துறவியா்கள் சங்கத்தின் புரவலா்களாகத் திகழும் சிரவையாதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், தவத்திரு ராமானந்த அடிகளாா், சேலம் ஆத்மானந்த அடிகளாா், வேதாந்த ஆனந்தா அடிகளாா் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com