பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தை பெற்ற பழங்குடியினப் பெண்ணுக்கு கரோனா

வால்பாறையில் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்ற பழங்குடியின பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை: வால்பாறையில் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்ற பழங்குடியின பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் உள்ளது பாலகிணாறு செட்டில்மெண்ட். அங்கு வசிக்கும் 24 வயது பழங்குடியின கா்ப்பிணிப் பெண், சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 17ஆம் தேதி அழைத்து வரப்பட்டுள்ளாா்.

நிறைமாத கா்ப்பிணியான அவருக்கு 5 நாள்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த வியாழக்கிழமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவருக்கு வெள்ளிக்கிழமை இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அன்றைய தினம் அவருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com