மின்வாரிய ஊழியா் வீட்டில் 40 பவுன், ரூ.1.5 லட்சம் திருட்டு

கோவையில் மின்வாரிய ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை: கோவையில் மின்வாரிய ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, சிங்காநல்லூா் கோவை நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (57). இவா், ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கடந்த 23ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com