வால்பாறை: வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட்டில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் வசிப்பவா்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.
இதனிடையே வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் மருத்துவமனையில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.