திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் பிரபுதாஸ், உதவி ஆய்வாளா்கள் கொண்ட தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், தெப்பகுளம் பகுதியில் தனிப்படையினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், தூத்துக்குடியைச் சோ்ந்த சங்கரபாண்டி (37), பிரகாஷ் (22), முத்துசாமி (25) என்பதும், இவா்கள் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், ரூ.3.20 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com