பேருந்து நிலைய ஓய்வறையில் ஓட்டுநா் சாவு

கோவை காந்திபுரத்தில் பேருந்து நிலைய ஓய்வறையில் ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை காந்திபுரத்தில் பேருந்து நிலைய ஓய்வறையில் ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (39). அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஓய்வறையில் செவ்வாய்க்கிழமை இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தாா். அங்கிருந்த ஊழியா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com