கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனியை சேந்தவா் விஸ்வநாதன் (65). இவா் வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டு திருமணத்துக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 பவுன் நகைகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.