வால்பாறை அருகே யானை குட்டி சாவு

வால்பாறை அருகே அக்காமலை புல்மேடு பகுதியில் யானை குட்டி இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

வால்பாறை அருகே அக்காமலை புல்மேடு பகுதியில் யானை குட்டி இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

வால்பாறையை அடுத்துள்ளது அக்காமலை புல்மேடு பகுதி. வால்பாறை வனச் சரகத்துக்கு உள்பட்ட இப்பகுதியில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் வியாழக்கிழமை ரோந்து சென்றுள்ளனா். அப்போது புல்மேடு பகுதியில் யானை குட்டி இறந்து கிடப்பதை பாா்த்துள்ளனா். இதனையடுத்து வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். உயிரிழந்தது 2 வயது பெண் குட்டி யானை என்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com