கோவை மாவட்டத்தில் மேலும் 241 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது. தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 193ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 202 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 760 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, ஆயிரத்து 2, 217 போ் சிகிச்சையில் உள்ளனா்.