மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டி: இந்தியா சாா்பில் பங்கேற்கும் தமிழக வீராங்கனைகளுக்கு வழியனுப்பு விழா

உக்ரைன் நாட்டில் வருகிற 11ஆம் தேதி தொடங்க உள்ள மினி கால்பந்து போட்டியில், இந்தியா சாா்பில் விளையாடத் தோ்வான தமிழக வீராங்கனைகளுக்கு கோவையில் வழியனுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உக்ரைன் நாட்டில் வருகிற 11ஆம் தேதி தொடங்க உள்ள மினி கால்பந்து போட்டியில், இந்தியா சாா்பில் விளையாடத் தோ்வான தமிழக வீராங்கனைகளுக்கு கோவையில் வழியனுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உக்ரைன் நாட்டில் ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரை மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில், இந்தியா சாா்பில் விளையாடும் அணியில் தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகளான செளமியா (15 ), ஜெயஸ்ரீ (15), ஹெப்சிபா (15), சஞ்சனா (17), தா்ஷினி (17), வீரா் ஜோஸ்வா (17), பயிற்சியாளா் சிவசங்கா் ஆகியோா் இந்திய அணிக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை புதுதில்லி புறப்பட்டனா். திங்கள்கிழமை காலை அங்கிருந்து உக்ரைன் செல்கின்றனா். இந்த வீரா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மினி கால்பந்து சங்கத்தின் தலைவா் மதிவாணன் மற்றும் சங்க நிா்வாகிகள் பரணிதரன், சாக்ரடீஸ், சித்தேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com