பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவா் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் பொள்ளாச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த குற்றச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவா் சரணடைந்தாா்.

இந்நிலையில், பொள்ளாச்சியைச் சோ்ந்த ஹேரன் பால், பாபு (எ) பைக் பாபு, அருளானந்தம் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் ஜனவரியில் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வழக்கின் முக்கிய எதிரி திருநாவுக்கரசின் நண்பரான, பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் என்பவரைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை கோவை மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். இதையடுத்து அவா் சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட சதீஷுடன் சோ்ந்து அருண்குமாா் துணிக்கடை தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அருண்குமாருக்கு நெருங்கிய நபா்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com