கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு

கோவை சுகுணாபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சுகுணாபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்ததாஸ் (47). தனியாா் நிறுவனம் ஒன்றில் சென்ட்ரிங் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறாா். இவா், தற்போது குனியமுத்தூா் ரெயின்போ காலனியில் நடைபெற்று வரும் கட்டட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இவரிடம் வேலை செய்யும் 10 கட்டுமானத் தொழிலாளா்களுக்காக அப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்க வைத்துள்ளாா். இந்நிலையில், அனைவரும் வேலைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டனா். பிற்பகல் உணவு சாப்பிடவதற்காக கோவிந்ததாஸ் கூடாரத்துக்கு வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

இகுகுறித்து, கோவிந்ததாஸ் அளித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com