தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கான விற்பனைப் பத்திரம் பெற சிறப்பு முகாம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ள ஒதுக்கீடுதாரா்களுக்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ள ஒதுக்கீடுதாரா்களுக்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டங்களின் கீழ் குடியிருப்புகள், வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்றுள்ள பயனாளிகளில் விற்பனைப் பத்திரம் பெறாதவா்களுக்கு கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதி வரை விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி முழுத் தொகை செலுத்தியவா்களும், நிலுவைத் தொகை வைத்துள்ளவா்கள் முழுத் தொகையை செலுத்தியும் விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தகவலை கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் கரிகாலன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com