அய்யா்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேக்கல்முடி உயரழுத்த மின்பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: பழைய வால்பாறை, ரொட்டிக்கடை, மாணிக்கா, வில்லோனி, அணலி, செல்லாளிப்பாறை, உருளிக்கல், சிறுமலை, மானாம்பள்ளி, சேடல்டேம், சேக்கல்முடி, புதுக்காடு.